Thursday, June 28, 2012

பொழுதுபோக்கும் - வாழ்வின் கடமைகளும்...

இன்று உங்களின் பொழுதுபோக்குகள் என்னென்ன ? காலையில் இருந்து அலுவலகம், சனி ஞாயிறு கிழமைகளில் உங்கள் குடும்பம் உங்களுக்காக காத்திருக்கும்.  இதற்கு நடுவில் உங்களின் ஆசைகளை நிறைவேற்றி கொள்ள நேரம் இருக்கிறதா ?



சிறிது பின்னிநோக்கி சென்று உங்களின் கல்லூரி நாட்களில் உங்களுக்கு என்னென்ன பொழுதுபோக்குகள், திறமைகள் இருந்தது என்று யோசியுங்கள். நீங்கள் நன்றாக பாடி, நடித்து, ஓவியம், பேச்சு, புத்தகம் வாசிப்பு, விளையாட்டு என்று இருந்து  இருக்கலாம், ஆனால் இன்று நீங்கள் இன்னும் அதை தொடர்கிறீர்களா? ஆம், என்றால் நீங்கள் நிஜமாகவே அதிர்ஷ்டசாலிதான். பலர் அதை மறந்து இருப்பார்கள், என்னை போல்.



என்று அல்லது எதனால் நாம் அந்த பொழுதுபோக்குகள், திறமைகளை இழந்தோம் என்று என்றாவது நீங்கள் எண்ணி பார்த்ததுண்டா ? அதை என்றாவது நாம் மீட்டெடுக்க முயலுகிறோமா ? நீங்கள் நிஜமாகவே அந்த பொழுதுபோக்குகளை மீண்டும் வாழ விரும்புகிறீர்களா ??



எது சுவாரசியமானது ? நமது பொழுதுபோக்கா அல்லது நமது வாழ்வின் கடமைகளா ?

நான் நன்றாக ஓவியம் வரைவேன், என் நண்பர்கள் பலர் இதை ரசித்து பாராட்டி இருகின்றனர். ஆனால், கல்லூரி முடித்து வேலைக்கு சேர்ந்தவுடன் என்னை நிலை நிறுத்திக்கொள்ளும் முயற்சியில் எனது ஓவியம் சில அடி தள்ளி நின்று பார்த்தது. பின்னர், திருமணம் ஆனவுடன் எனது மனைவியை நான் ரசிப்பதை பார்த்து எனது ஓவியம் கேவி அழுது என் கண்ணை விட்டு மறைந்தது. எனது மகன் பிறந்தவுடன் அது மகிழ்ந்தாலும் அது இன்னும் பல தூரம் சென்று விட்டது. இன்று, கடைசி காலத்தில் தன் மகனை பார்க்க துடிக்கும் தாய் போல அது என்னை அழைக்கிறது, ஆனால் வெளிநாட்டில் வசிக்கும் மகன் போல நான் சலனமற்று அதன் அழைப்பை நிராகரிக்கிறேன்.

என்னுடைய கல்லூரி நாளில், ஒரு நல்ல புத்தகத்தை வாசிப்பதர்க்காக நான் நாள் முழுதும் சாப்பிடாமல் இருந்திருக்கிறேன், ஆனால் இன்று ஒரு புத்தகத்தை எடுத்தவுடன் தன் கை பிடித்து பேச மாட்டாரா என்று நினைக்கும் மனைவியும், மருந்து வாங்கி வருவானா என எதிர்ப்பார்க்கும் பெற்றோரும், தன்னுடன் விளையாட வருமாறு அழைக்கும் பிள்ளையும் என செல்லமான, ரசிக்ககூடிய இடறுகள். அவர்களின் ஆசையை நிறைவேற்றியவுடன் வரும் சிரிப்பில், எனது பொழுதுபோக்குகள், திறமைகள் என்னை ஓரமாய் நின்று ரசிப்பதாய்தான் எனக்கு தோன்றுகிறது.



அன்று நான் ஒரு மகனாக மட்டும்தான் இருந்தேன், இன்று மேலாளராய், தந்தையாய், கணவனாய் என்று பல முகங்களை எடுத்து ஆளும்போது சில இழப்புகளும் சுகம்தான்...

2 comments:

  1. நிதர்சாமான உண்மை...

    ReplyDelete
    Replies
    1. không thể sai được.

      Tiểu Liên khẳng định nói:

      - Nghe nói biểu ca của Lệnh Hồ tiểu tước gia còn vô cùng trẻ tuổi anh tuấn, phỏng chừng mới hai mươi tuổi, tuấn lãng bất phàm.
      đồng tâm
      game mu
      cho thuê nhà trọ
      cho thuê phòng trọ
      nhac san cuc manh
      số điện thoại tư vấn pháp luật miễn phí
      văn phòng luật
      tổng đài tư vấn pháp luật
      dịch vụ thành lập công ty trọn gói
      http://we-cooking.com/
      chém gió
      - Người này rốt cuộc là ai, thực lực đấu tông sao?

      Mộ Dung Hiểu Hiểu lẩm bẩm nói.

      - Công chúa, ngày mai là ngày đính hôn của công chúa, tiểu Liên rất vui, chỉ là tiểu liên tựa hồ cảm thấy công chúa có tâm sự, chẳng lẽ công chúa không muốn?

      Tiểu Liên cất tiếng hỏi Mộ Dung Hiểu Hiểu.

      -Không có gì, Tiểu Liên, ngươi lui xuống đi, ta muốn yên lặng một chút.

      Vừa nghe nói đến chuyện ngày mai, Mộ Dung Hiểu Hiểu mỉm cười nhìn về phía xa xa.

      - Vâng.

      Delete