Tuesday, July 17, 2012

நான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் - நல்லகண்ணு (CPI லீடர்)

காமராஜர், கக்கன் என்று நேர்மையான அரசியல்வாதியை பற்றி எல்லாம் நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம், அப்படி எல்லாம் இருக்க முடியுமா என்று நாம் ஆச்சர்யபட்டு இருக்கும் போது நமக்கு ஒரு வாழும் உதாரணமாய் தெரிபவர் திரு.நல்லகண்ணு அவர்கள்.



இவரின் எளிமையை பற்றி நான் மிகவும் கேள்வி பட்டு இருக்கிறேன், ஒரு முறை ஒரு தொகுதியின் MLA, அவரின் தொகுதியில் இருந்து சென்னை வரை பயணப்படும்போது, வழியில் ஒரு இடத்தில் சாப்பிட நிறுத்தி இருக்கிறார். அவர் காரை விட்டு கீழே இறங்கி எதிரில் இருந்த பஸ் நிறுத்தத்தில் ஒரு மனிதர் உறங்கி கொண்டு இருந்ததை பார்த்து விட்டு பதறி போய் அவரை எழுப்பினார். அவர்தான் திரு.நல்லகண்ணு அவர்கள் !! என்ன இப்படி இங்கே படுத்து இருக்கிறீர்களே என்று கேட்டதற்கு, இரவு ஒரு மீட்டிங்கை முடித்து விட்டு பகலில் இன்னொரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்றும், எதற்கு ரூம் எல்லாம் செலவு செய்ய வேண்டும் என்று இங்கே வந்து உறங்குவதாக தெரிவித்து இருக்கிறார்.

இவர் மக்கள் பிரச்சனைகளுக்கு மட்டுமே குரல் கொடுத்து கொண்டு, அவர்களுக்காக மட்டுமே வாழ்ந்தும் கொண்டு இருக்கிறார். ஆனால், மக்கள் இவருக்கோ அல்லது இவரின் கட்சிக்கோ வோட்டு போடுவதில்லை என்பதுதான் இங்கே சோகமான ஒன்று.



இவர் தனக்காக எதுவும் வைத்துகொள்ளாமல், மக்களுகாக எல்லாவற்றையும் தியாகம் செய்கிறார். இவரை ஒரு முறையாவது சந்தித்து, அவரின் கைகளை பற்றி கண்களில் ஒற்றி கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment