Thursday, June 14, 2012

கடல் பயணங்கள் ஆரம்பம்...

இது எனது முதல் ப்ளாக்ன், முதல் இடுகை !! வெகு ஆச்சர்யமாக இருக்கிறது....எனது எழுத்தை நான் பார்பதற்கு !

கடல் பயணங்கள் !! எதற்கு இந்த பெயர் ? வெகு நேரம் யோசித்து யோசித்து, எனக்கு நானே பல பட்ட பெயர்கள் வைத்து, ஆழமாய் சென்று எனது ஆசைகளை புரட்டி என்று பல முயற்சி செய்து ஒரு பெயரை முயற்சித்து பார்த்தேன்....ஆனால் ஒன்றுமே என்னை  பிரதிபளிகவில்லை என்பதை உணர்தேன்.

என் கண்களை மூடி, எது எனக்கு மிகவும் பிடித்தது என்று ஆராயும்போது, கடலும், பயணமும்  மட்டுமே எனக்கு என்றும் ஆச்சர்யத்தை கொடுத்தது என்றல் அது மிகை ஆகாது. ஆகவே, இதோ "கடல் பயணங்கள்" ஆரம்பம்.



இந்த இடுகைகளை எத்தனை பேர்  படிக்கச் போகிறார்கள் என்று எனக்கு இன்று தெரியாது... ஆனால் இதன் மூலம் ஒரு நல்ல நண்பர்கள் வட்டத்தை உருவாக்கி கொள்ள போகிறேன் என்பது எனது எண்ணம் ......


வா நண்பனே நமது கடல் பயணத்தை ஆரம்பிக்கலாம்...!

8 comments:

  1. //வெகு ஆச்சர்யமாக இருக்கிறது....எனது எழுத்தை நான் பார்பதற்கு !// இந்த வரியைப் படிக்கும் பொழுது என்னை நான் கண்ணாடியில் பார்ப்பது போன்ற உணர்வு.

    //கடலும், பயணமும்// உங்களிடமே கேட்க வேண்டும் என நினைத்து இருந்தேன். நீங்களே விளக்கம் கொடுத்து விட்டீர்கள்... கடலில் அதிகம் பயணிப்பவரோ என்று நினைத்தேன்... காரணம் எனக்கு கடலில் பயணிக்க வேண்டும் என்பது நெடுநாள் ஆசை

    ReplyDelete
    Replies
    1. எனது முதல் பதிவை ரசித்து படித்து உங்களது கருத்துக்களை இட்டதற்கு மிக்க நன்றி சீனு !! இந்த கடல் பயணத்தில் உங்களை போன்ற நண்பர்களை பெற்றதுதான் எனக்கு வெற்றி !

      Delete
  2. I have no blogs,but i read lots of the blogs.Your narrative style and content made me introduce my self.
    I never commented in any blogs,which i read.

    Will meet once.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே..... இது போன்ற வார்த்தைகள்தான் எனது இந்த பயணத்தை அர்த்தமுள்ளதாகவும், சுவையாகவும் ஆக்குகிறது ! கண்டிப்பாக சிந்திப்போம்.....


      Delete
  3. இன்னும் முழுமையாக பல தலைப்புகளை படிக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஜோதிஜி........ படித்துவிட்டு குறை நிறைகளை சொல்லுங்களேன், காத்திருக்கிறேன் !

      Delete