Friday, July 20, 2012

சோலை டாக்கீஸ் - ஒரு துளி விழுதே...(என் சுவாச காற்றே)

என்றுமே மழை என்பது ஆச்சர்யம் தரும் ஒரு இன்பம். சிறு வயதில் எல்லாம் மழையில் ஆடும்பொழுது அவ்வளவு உற்சாகம் இருக்கும், இப்போதெல்லாம் சளி பிடித்து விடுமோ என்ற பயம் மட்டுமே இருக்கிறது !! அப்படிப்பட்ட மழையை சிலாகித்து வந்த பாடல்தான் இது. ஒவ்வொரு முறை மழை வரும்போதும், ஒரு கோப்பை தேநீர் கையில் ஏந்தி இந்த பாடலை முனகும்போது அந்த மழையில் நனையாமலே உங்களுக்கு அந்த உணர்ச்சி வரும்.

AR  ரகுமான் இசை அமைத்து, வைரமுத்து எழுதிய இந்த பாடல் மழையை போற்றும் ஒரு உன்னதமான இசை. இந்த பாடலை மணிரத்தினம், PC ஸ்ரீராம் எடுத்து இருந்தால் அது காலத்தால் அழியாத காவியம் ஆகி இருக்கும்...கேட்டு மகிழுங்கள் நண்பர்களே !


இந்த பாடலை கேட்கும் போது, சிறு வயதில் கமல் பாடி ஆடிய இந்த பாடல் பற்றியும் குறிப்பிட்டு ஆக வேண்டும். "மேகம் கொட்டட்டும்..." என்ற அந்த பாடல், அதை கேட்பவரை ஆட வைக்கும். 1984ம்  வருடம் இசைஞானி இளையராஜாவின் இசையில், SPB  பாடிய இந்த பாடலையும் நீங்கள் விரும்புவீர்கள். கண்டிப்பாக இந்த ரெண்டு பாடலையும் கேட்ட பிறகு உங்களுக்கு ஜலதோஷம் பிடிக்கும் !!


உங்கள் கவனத்திற்கு :

அடுத்த "சோலை டாக்கீஸ்" பதிவிலிருந்து ஒரு மாற்றத்தை, புதுமையை புகுத்தலாம் என்றிருக்கிறேன். மாற்றத்தை கண்டுவிட்டு எனக்கு உங்கள் கருத்தை அளியுங்கள் நண்பர்களே...

No comments:

Post a Comment