Tuesday, July 31, 2012

அறுசுவை - திண்டுக்கல் கையேந்தி பவன் போளி

 திண்டுக்கல் பதிவு நிறைய போடறேன் அப்படின்னு என் நண்பர் சொன்னார், என்ன பண்றது என்னோட மனைவி அங்கதானே இருக்காங்க !! நானும் என் மச்சானும் சேர்த்தோம்முன்னா வீட்டுலயே சாப்பிட மாட்டோம், அதுவும் அவன் சந்து பொந்துல்ல எல்லாம் எந்த கடையில எது நல்லா இருக்குதுன்னு பார்த்து பார்த்து கூட்டிகிட்டு போறபோது என்ன செய்ய முடியும் சொல்லுங்க ? 

இந்த வார அறுசுவையில திண்டுகல்லுல கிடைக்கிற கையேந்தி பவன் போளி கடை பத்தி !! கடை இருக்கிறது என்னமோ ரோட்டுல, ஆனா ருசியோ அபாரம் ! கடைக்காரரும்,  இவர் அப்பாவும் திண்டுகல்லுல தனி தனியா கடை போட்டு இருக்காங்க, ரெண்டுலயும் வெறும் ரெண்டு மெனுதான்....தேங்காய் நெய் போளி, வெஜிடபுள் மசாலா போளி. முதல்ல நானும் என்னடா கையேந்தி பவன்ல போய் சாப்பிடன்னுமான்னு யோசிச்சேன், ஆனா இங்க வர கூட்டத்தை பார்த்தீங்கன்னா நீங்க யோசிக்கவே மாட்டீங்க. ஒரு நாளைக்கு குறைஞ்சது 500 போளி வரை போடறாரு அப்படின்னா பாருங்க !!


சும்மா சர சரன்னு மைத்த மாவை கையில எடுத்து லேசா தேய்ச்சி, நடுவுல இனிப்புன்னா தேங்காய், காரம்ன்னா மசாலான்னு வைச்சி அதை உருண்டை ஆக்கி சட்டுன்னு தட்டையா அமுக்கி கல்லுல போடும்போதே உங்களுக்கு நக்கு ஊற ஆரம்பிச்சிடும். சும்மா சுட சுட ஒரு இனிப்பு, ஒரு காரம்ன்னு தட்டில வைச்சி நீட்டுரப்ப உங்க கையை விட நாக்கு முன்னுக்கு போய் நிக்கும். சாப்பிட அரம்பிசீங்கன்னா அப்படியே உள்ள போய்கிட்டே இருக்கும்.


இந்த கடை திண்டுக்கல் பஸ் ஸ்டான்ட் பக்கத்தில் (திருவள்ளுவர் சாலை) இருக்கு, சாயங்காலம் அஞ்சு மணியில இருந்து நைட் சரக்கு தீருகிற வரை இருக்கும். என்னடா கையேந்தி பவனா அப்படின்னு யோசிக்காதீங்க...நிறைய பேரு காருல எல்லாம் வந்து சாப்ட்டு போறாங்க. 

2 comments:

  1. what about "THALABBAKATTI" Biriyaani?

    ReplyDelete
    Replies
    1. ஆம் நண்பரே, தலைப்பாக்கட்டு பிரியாணி பதிவு தயார்....விரைவில் நீங்கள் படிப்பீர்கள். நன்றி...தங்கள் கருத்துக்கும், வருகைக்கும்.

      Delete