Monday, August 27, 2012

ஆச்சி நாடக சபா - சாக்லேட் கிருஷ்ணா நாடகம்

உலகின் எந்த மூலையில் ஒரு ஷோ பார்த்தாலும், நம்ம ஊரில் அதுவும் தமிழில் ஒரு நாடகம் பார்த்தால் அது பரம சுகம். ஒரு முறை சென்னையில் என்னுடைய நண்பனின் திருமணதிற்கு சென்று இருந்தபோது நானும் என் மனைவியும் பீச் சென்று விட்டு அப்படியே எங்கேனும் படம் போகலாம் என்று இருந்தோம், ஆனால் அந்த சமயத்தில் எந்த நல்ல படமும் ஓடவில்லை என்பதால் பேப்பரில் வந்து இருந்த கிரேசி மோகனின் "சாக்லேட் கிருஷ்ணா" நாடகம் செல்லலாம் என்று முடிவு செய்தோம். இதுவரை நாங்கள் மேடை நாடகம் எதுவும் அதுவும் அரங்கினுள் சென்று காணவில்லை, ஆதலால் இது ஒரு வித்யாசமான அனுபவமாக இருக்கும் என்று எண்ணினோம்.


நாடகம் பார்க்க நான் முதல் வரிசை டிக்கெட் புக் செய்து ஒரு ஆளுக்கு 500 ரூபாய் கொடுத்திருந்தேன், ஆனால் சென்றவுடன்தான் தெரிந்தது 100 ரூபாய் டிக்கெட் வாங்கி இருக்கலாம் என்று...காரணம் ஸ்டேஜ் ஒன்று அவ்வளவு தூரம் இல்லை !! மாலை ஆறு முப்பதுக்கு தொடங்க வேண்டிய நாடகம் ஏழு முப்பதுக்குதான் தொடங்கியது, திரு. கிரேசி மோகன் அவர்கள் இன்னொரு விழா சென்று விட்டு தாமதமாய் வந்ததால் ! ஆனால், நாடகம் தொடங்கியவுடன் இருந்து சிரிப்பு மழைதான். அதுவும் மாது பாலாஜி அவர்களின் டைமிங் ரொம்பவே நன்றாக இருந்தது.


கடவுள் உங்கள் குரலுக்கு செவி சாய்த்து வந்து உங்கள் வாழ்வில் அற்புதங்களை நிகழ்த்தி வைக்கலாம், ஆனால் அது எவ்வளவு பெரிய சுமை, ஆபத்து என்பது இந்த நாடகத்தில் சொல்லப்படும் கருத்து, ஆனால் சொல்கின்ற விதத்தில் அருமையாய் இருக்கிறது. நொடிக்கு நொடி சிரிப்பு வெடி கொளுத்தி போட்டு உங்களை கட்டி போட்டு விடுகின்றனர். கண்டிப்பாக நீங்கள் ஒரு முறையாவது ஒரு மேடை நாடகத்தை பார்க்க வேண்டும், ஒரு வித்யாசமான அனுபவமாக இருக்கும். இந்த நாடகத்தின் டிரைலர் கீழே இருக்கிறது, பார்த்து மகிழுங்கள்.




2 comments:

  1. நானும் இந்த நாடகத்தைப் பார்த்து
    மிகவும் ரசித்திருக்கிறேன்
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி சார்.

      Delete