முதலில் ஒரு சின்ன குவிஸ்....
1.) பல கொலை செய்து சுவற்றில் மறைத்த பெரும் கொலைகாரன் யார் ?
2.) மச்சான் என்று கூப்பிடும் நடிகை யார் ?
3.) பசுமை தாயகம் என்னும் அமைப்பின் தலைவர் யார் ?
4.) யானை சின்னத்தை கொண்ட உத்திரப்ராதேஷ் மாநிலத்தின் முதலமைச்சர் யார் ?
5.) விஜயகாந்த் கட்சியின் சின்னம் என்ன ?
6.) கமலின் அடுத்த படம் என்ன ?
மேலே உள்ள ஆறு கேள்விகளில், உங்களுக்கு ஐந்து கேள்விக்கு விடை
தெரிந்தால் நீங்கள் தினமும் பேப்பர் படிப்பவர், பொது அறிவு உள்ளவர்.
இப்போது சொல்லுங்கள்....உங்களுக்கு சாவித்திரி வைத்தியை தெரியுமா ?
தெரிந்தால் நீங்கள் தினமும் பேப்பர் படிப்பவர், பொது அறிவு உள்ளவர்.
இப்போது சொல்லுங்கள்....உங்களுக்கு சாவித்திரி வைத்தியை தெரியுமா ?
ம்ம்ம்...நமக்கு சம்பந்தம் இல்லாத, நமக்கும் சமூகத்துக்கும் எந்த ஒரு நல்லதையும்
செய்யாத பல விஷயங்களை தெரிந்த நமக்கு, தனது வாழ்வின் எல்லா
தருணங்களையும், பல பல பொதுசேவை விருதுகளையும் வென்ற இந்த
சாவித்திரி வைத்தி அவர்களை தெரியாது என்பது சோகம்தான்.
செய்யாத பல விஷயங்களை தெரிந்த நமக்கு, தனது வாழ்வின் எல்லா
தருணங்களையும், பல பல பொதுசேவை விருதுகளையும் வென்ற இந்த
சாவித்திரி வைத்தி அவர்களை தெரியாது என்பது சோகம்தான்.
ஒரு எண்பது வயது முதியவரால் என்ன செய்ய முடியும், அதுவும் அவருக்கு
சொந்தம், பணம் இல்லையென்றால் ? சாவித்திரி வைத்தி என்ற எண்பது வயது பாட்டி ஒருவர் இன்றும் தளராது பொது சேவை செய்து கொண்டு,
ஒரு முதியோர் காப்பகமும் நடத்தி வருகிறார். இவர் மட்டும் அல்ல, இவரது குடும்பமே பொது சேவை செய்துள்ளது என்றால் அது மிகையாகது. சிறு வயதில் இருந்து பொது சேவை, திருமணம் ஆனா பின்னர் தனது தோழியருடன் "திங்கள்கிழமை பொதுசேவை அமைப்பு", ஊன்றுகோல் என்னும் சேரி பகுதி முதியவர்களுக்கு உணவளிக்கும் அமைப்பு, விஸ்ராந்தி பொதுசேவை அமைப்பு என்று இந்த எண்பது வயதிலும் அயராது உழைத்து வருகிறார்.
சொந்தம், பணம் இல்லையென்றால் ? சாவித்திரி வைத்தி என்ற எண்பது வயது பாட்டி ஒருவர் இன்றும் தளராது பொது சேவை செய்து கொண்டு,
ஒரு முதியோர் காப்பகமும் நடத்தி வருகிறார். இவர் மட்டும் அல்ல, இவரது குடும்பமே பொது சேவை செய்துள்ளது என்றால் அது மிகையாகது. சிறு வயதில் இருந்து பொது சேவை, திருமணம் ஆனா பின்னர் தனது தோழியருடன் "திங்கள்கிழமை பொதுசேவை அமைப்பு", ஊன்றுகோல் என்னும் சேரி பகுதி முதியவர்களுக்கு உணவளிக்கும் அமைப்பு, விஸ்ராந்தி பொதுசேவை அமைப்பு என்று இந்த எண்பது வயதிலும் அயராது உழைத்து வருகிறார்.
1978 ம் ஆண்டு இவர் ஆரம்பித்த முதியோர் இல்லம் இன்றும் பலரை வாழ வைத்து கொண்டு இருக்கிறது. முதியோர் மட்டும் இல்லாமல், ஆதரவில்லாமல் இருக்கும் பெண்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்றும் அடைக்கலம் கொடுக்கிறது. சாக போகும் முதியவர்களை சந்தித்து கண்தானம் செய்யும் திட்டமும் நடைமுறையில் இருக்கிறது. ஒரு முறை இவர் ஆரம்பித்த முதியோர் இல்லத்தில் முதல் சாவு நடந்த போது யாருக்கும் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தபோது இவரே முன்னின்று அடக்கம் செய்து, பெண்கள் இதை செய்ய கூடாது என்பதை மீறி இன்று வரை இப்படி 300 பிணங்களை அடக்கம் செய்ய உதவி இருக்கிறார். பின்னர் சாவை கண்டு முதியவர்கள் நடுங்காமல் இருக்க எல்லா விதமான முயற்சியும் செய்திருக்கிறார் இந்த சாகா புகழ் பெற்ற பெண்மணி.
இவரின் விஸ்ராந்தி பொதுசேவை அமைப்பை பற்றி தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்...Vishranthi Charitable trust
இவரின் அமைப்புக்கு உதவ விரும்புவோர் இந்த முகவரிக்கு உங்களின் உதவியை அனுப்பவும்...Vishranthi Charitable Trust, 4/227, AVM Rajeswari Gardens, MGR Salai, Palavakkam, Chennai - 600 041
இவர் ரிலையன்ஸ்ன் "ரியல் ஹீரோஸ்" விருது, லியோன்ஸ் கிளப்ன் விருது என்று பல பல விருதுக்களை வாங்கி இருக்கிறார். அனால் இவரை பற்றி தெரியாது என்று சொல்கிறீர்கள்....ஒன்று உங்களின் பொது அறிவு குறைவு, அல்லது நல்லவர்களுக்கு இங்கு வாழ்க்கை இல்லை, புகழும் இல்லை.
hi Suresh,
ReplyDeletegood to know. thanks for sharing. one small spelling mistake: please change மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்றும் அடிக்கலாம் கொடுக்கிறது.
Adikkalaam to adaikkalam.
ரொம்ப ரொம்ப நன்றி மணிகண்டன்....பிழையை திருத்திவிட்டேன். தங்களின் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.
Deleteஅவரைப்பற்றி படித்திருக்கிறேன்.மிகவும் பாராட்டிற்குரியவர்.
ReplyDeleteநன்றி.
தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே !
Delete