மஹாபலிபுரம் என்று இன்று அழைக்கப்படும் மாமல்லபுரம் சென்று இருந்தேன். வெயில் எங்களை வாட்டி எடுத்தது என்றாலும் அந்த சிற்பங்களை பார்க்கும்போது வியப்பு ஏற்பட்டது ! இது ஏழாம் நூற்றாண்டில் நரசிம்மவர்மன் என்னும் அரசனால் உருவாக்கப்பட்டது, அப்போது பல்லவர்களின் பொழுதுபோக்கு மல்யுத்த விளையாட்டு, அதில் இந்த நரசிம்மவர்மன் வல்லவன் ஆகையால் அவனை மா - மல்லன் என்று அழைப்பார்கள், அதுவே இன்று மாமல்லபுரம் என்று ஆனது.
இங்கு பார்பதற்கு என்று நான்கு முக்கிய இடங்கள் உண்டு....புலி குகை, கடற்கரை கோவில், கிருஷ்ணனின் வெண்ணை உருண்டை இடங்கள் மற்றும் பஞ்ச ரதம். பொதுவாக ECR இல் இருந்து நிறைய டூரிஸ்ட் பஸ் உள்ளது, அல்லது கோயம்பேடில் இருந்து பாண்டிச்சேரி பஸ்சில் சென்றால் அதில் மகாபலிபுர பிரிவு ரோட்டில் இறக்கி விடுவார்கள். ஆனால் உங்களிடம் ஒரு கார் இருந்தால் அதில் செல்லுங்கள்....கடற்கரை ஓரம் காற்று வாங்கியபடியே செல்லுவதில் ஒரு சுகம் இருக்கிறது !
நீங்கள் இங்கு மதியம் சாப்பிட்டு விட்டு செல்லுதல் நலம்....அதுவும் நீங்கள் முதலில் புலி குகை வரை சென்று அங்கு இருக்கும் மர நிழலில் நன்றாக ஓய்வு எடுங்கள், அதற்குள் சூரியன் மறைய தொடங்கும். பின்னர் கிருஷ்ணனின் வெண்ணை உருண்டை இடத்தை அடைய வேண்டும் (இது மகாபலிபுர பஸ் ஸ்டான்ட் பின்னே இருக்கிறது), அங்கு நீங்கள் செல்லும்போது சூரியன் மலைகளுக்கு பின்னால் மறைந்திருப்பதால் உங்களுக்கு நிழல் கிடைக்கும், இல்லையென்றால் வெயிலில் பாறையில் நீங்கள் ஏற முடியாது. இதை நீங்கள் முடித்து விட்டு பஞ்ச ரதம் சென்றால் அங்கு மணல் சூடு குறைந்திருக்கும், அதனால் பொறுமையாக நீங்கள் பார்க்க முடியும். இதை நீங்கள் 5:30pm மணிக்குள் முடித்து விட்டால் நேராக கடற்கரை கோவிலுக்கு வந்து விடுங்கள்....இங்கு நீங்கள் மாலை காற்றுடன் சூரியன் மறையும் நேரத்தில் அற்புதமான போட்டோ எடுக்க முடியும். இதை நீங்கள் முடித்து விட்டு கடற்கரை மணலில் விளையாடலாம், பின்னர் சாப்பிட்டு விட்டு வீடு திரும்பலாம், அதுவும் நீங்கள் திரும்பும்போது கடல் காற்றின் குளுமை உங்களின் மனதையும், உடலையும் குளிர்விக்கும் !! நான் மேலே சொன்ன ஆர்டரின் படி சென்றால் உங்களுக்கு வெயில் தெரியாது, களைப்பும் தெரியாது இல்லையென்றால் நீங்கள் சீக்கிரம் களைபடைவீர்கள்.
நீங்கள் இங்கு சென்றால் முக்கியமாக எதையும் வெளியில் வாங்கி சாப்பிடாதீர்கள், முக்கியமாக பிளாஸ்டிக் பொருட்களில்....இளநீரின் ஸ்ட்ராவில் இருந்து, ஜூஸ் கப் வரை பொறுக்கி மீண்டும் உபயோகிப்பார்கள், இதற்கென்று சிறுவர்கள் இரவுகளில் கடைகளின் முன் போட்டி போடுவதை பார்க்கலாம். இங்கு சங்கினால் செய்யப்பட்ட பொருட்கள் மிகவும் பிரபலம், வெவ்வேறு வகைகளில் கிடைக்கும். எங்கும் தனியாக செல்ல முற்படாதீர்கள்....உங்களுக்கு ரோமியோக்களின் தொந்தரவுகள் இருக்கும் !
மகாபலிபுர கடற்கரை கோவில்....மாலை வெயிலில் ! |
![]() |
இது யானை சிற்பம் பகுதி என்பார்கள், இதன் பின்னால் நிறைய சிற்பங்கள் ! |
![]() |
பஞ்ச ரதம் ! |
நீங்கள் இங்கு மதியம் சாப்பிட்டு விட்டு செல்லுதல் நலம்....அதுவும் நீங்கள் முதலில் புலி குகை வரை சென்று அங்கு இருக்கும் மர நிழலில் நன்றாக ஓய்வு எடுங்கள், அதற்குள் சூரியன் மறைய தொடங்கும். பின்னர் கிருஷ்ணனின் வெண்ணை உருண்டை இடத்தை அடைய வேண்டும் (இது மகாபலிபுர பஸ் ஸ்டான்ட் பின்னே இருக்கிறது), அங்கு நீங்கள் செல்லும்போது சூரியன் மலைகளுக்கு பின்னால் மறைந்திருப்பதால் உங்களுக்கு நிழல் கிடைக்கும், இல்லையென்றால் வெயிலில் பாறையில் நீங்கள் ஏற முடியாது. இதை நீங்கள் முடித்து விட்டு பஞ்ச ரதம் சென்றால் அங்கு மணல் சூடு குறைந்திருக்கும், அதனால் பொறுமையாக நீங்கள் பார்க்க முடியும். இதை நீங்கள் 5:30pm மணிக்குள் முடித்து விட்டால் நேராக கடற்கரை கோவிலுக்கு வந்து விடுங்கள்....இங்கு நீங்கள் மாலை காற்றுடன் சூரியன் மறையும் நேரத்தில் அற்புதமான போட்டோ எடுக்க முடியும். இதை நீங்கள் முடித்து விட்டு கடற்கரை மணலில் விளையாடலாம், பின்னர் சாப்பிட்டு விட்டு வீடு திரும்பலாம், அதுவும் நீங்கள் திரும்பும்போது கடல் காற்றின் குளுமை உங்களின் மனதையும், உடலையும் குளிர்விக்கும் !! நான் மேலே சொன்ன ஆர்டரின் படி சென்றால் உங்களுக்கு வெயில் தெரியாது, களைப்பும் தெரியாது இல்லையென்றால் நீங்கள் சீக்கிரம் களைபடைவீர்கள்.
நீங்கள் இங்கு சென்றால் முக்கியமாக எதையும் வெளியில் வாங்கி சாப்பிடாதீர்கள், முக்கியமாக பிளாஸ்டிக் பொருட்களில்....இளநீரின் ஸ்ட்ராவில் இருந்து, ஜூஸ் கப் வரை பொறுக்கி மீண்டும் உபயோகிப்பார்கள், இதற்கென்று சிறுவர்கள் இரவுகளில் கடைகளின் முன் போட்டி போடுவதை பார்க்கலாம். இங்கு சங்கினால் செய்யப்பட்ட பொருட்கள் மிகவும் பிரபலம், வெவ்வேறு வகைகளில் கிடைக்கும். எங்கும் தனியாக செல்ல முற்படாதீர்கள்....உங்களுக்கு ரோமியோக்களின் தொந்தரவுகள் இருக்கும் !
டிப்ஸ் :
பயணம் - அருமையான ரோடு, கடல் ஒருபுறம் என்று உங்கள் பயணம் இனிமையாக இருக்கும். காரில் சென்றால் நன்றாக இருக்கும், பைக்கில் சென்றால் இன்னும் அருமை !
பணம் - போவதற்கு பஸ், சாப்பிட, சுற்றி பார்க்க என்று ஒரு ஆளுக்கு சுமார் 350 ரூபாய் வரும். காரில் சென்றால் பெட்ரோல் செலவு தனி.
சாப்பாடு - வழியெங்கும் உணவகங்கள் இருக்கின்றன, அங்கு சென்று ஏதாவது வாங்கி கொள்ளலாம் என்று மட்டும் நினைக்க வேண்டாம், கூட்டம் அதிகமாக இருக்கிறது, விலையும் அதிகம்.
காலம் - எல்லா காலங்களிலும் செல்லலாம், ஆனால் மார்ச்சில் இருந்து ஜூன் வரை வெயில் கடுமையாக இருக்கும்.
பஞ்ச் - வழியில் முதலை பண்ணை, சவுக்கு தோப்புகள், முட்டுக்காடு போட் ஹவுஸ் என்று பல இடங்கள் உள்ளன.
Label : Mahabalipuram, Chennai sightseeing, kadalpayanangal, Short trip chennai
சிறந்த சுற்றுலா இடம்... முன்பை விட தற்போது அழகாக பராமரிக்கிறார்கள்...
ReplyDeleteஇனிய அனுபவ பகிர்வுக்கு நன்றி...
நன்றி தனபாலன் சார் ! இந்த இடம் மிகவும் அருமை, ஆனால் பாதுகாப்பு சற்று குறைந்து வருகிறது சில மாதங்களாய் !
Deleteபடங்கள் ஏதோ லென்ஸ் வழியாகப் பார்ப்பது போல deform ஆகித் தெரிகிறது, எப்படி எடுத்தீர்கள், முக்கியமாக அந்த யானைச் சிறப்பம் ஐந்து ரதம்...............??
ReplyDeleteநன்றி தாஸ் ! இப்போதெல்லாம் காமெராவில் 3டி ஸ்வீப் பனோரமா என்னும் அம்சம் வருகிறதே, பொறுமையாக உங்களது காமெராவை சுற்றினால் படங்கள் எல்லாம் கோர்த்து ஒரே பிரமிள் வருகிறது, அதை உபயோகித்தேன், ஆனால் எடுத்தது எனது நண்பர் !
Delete
ReplyDeleteSEMINAR ON MAHABALIPURAM - "PALLAVA MALLAI" -MEANING MALLAI (as fondly called in Tamil) OF PALLAVAS :-
“PALLAVA MALLAI” (Celebrating Art along with Music). It is for Two full days Dec 24 Sat & 25 Sun 2016 - 10 am to 6 pm. The Venue is Tamil Virtual Academy, Anna University Campus, Gandhi Mandapam Road, Kotturpuram, Chennai, Tamil Nadu 600025, next to Anna Centenary Library, Kotturpuram, Chennai
THE coverage will be on the Overview of Mahabalipuram, History of Mallai
from Sangam days and how it was rediscovered in the last 200 years,
understanding the inspiration and imagination of kings from their
epigraphs, how they expanded Mamallai into a gallery of scintillating
sculpture and temple architecture, beginning from cave temples to
structured temples. The seminar also covers the fine arts in terms of
pasurams sung on Mamallai and the unique TDEF eco-system prevalent in
Mallai area along with an appreciation of Sanskrit, satire, dance, song
mixed with a unique presentation of Mattavilasa Prahasana, the dance
drama composed by Mahendra Varma Pallava.
:::WHY YOU SHOULD ATTEND THIS :::
There’s an ocean of ignorance between the history and significance of
Mamallapuram and its perception in the public mind. It was a laboratory
of art and sculpture, an open-air museum patronized by a dynasty of
dynamic monarchs, a granite canvas for Grantham calligraphy, a field of
stone planted with immortal monuments by artists with fertile
imaginations. It stands unique in its diversity of architecture. In
grace, it has sometimes been equaled, but rarely surpassed. It was the
epicenter of a cultural earthquake, whose aftershocks reverberated for a
thousand years. Its impact spread across the land, and even crossed the
oceans. But as subtle as the sculptures, are the unsolved mysteries it
poses; about authorship, inspiration, incompleteness, paucity of
literary references, even its influences and a later loss of
imagination.
PLEASE cascade the information and all of your friend circle or whoever
interested on this subject. No registration is required to attend our
program and its absolutely FREE. All are welcome!
FOR any quick queries, contact Sivasankar Babu 98400 68123 or Ramki 9841489907 of the Organizing Group.
NOTE: - IF YOU CAN GIVE YOUR EMAIL ID I CAN SEND THE PROGRAMME SCHEDULE.
Organised by Tamil Heritage Trust, Chennai. www.tamilheritage.in