Friday, December 14, 2012

நான் ரசித்த குறும்படம் - தரமணியில் கரப்பான்பூச்சிகள்

இந்த குறும்படத்தின் கதை என்பது திரு.எஸ்.ராமகிருஷ்ணன் எழுதியது என்று போட்டிருந்தது, இதை அஷ்வின் என்பவர் இயக்கி இருக்கிறார். ஆரம்பிக்கும்போது இருந்து ஒரு மெல்லிய காமெடி இழையோடி அடுத்து என்னது என்று எண்ண வைக்கிறார். ஆனால் இந்த கதை எட்டாவது நிமிடத்தோடு முடிந்திருந்தால் மனதை கனமாக்கும் ஒரு அற்புதமான கதை எனலாம், ஆனால் இன்னும் இரண்டு நிமிடம் அதை இழுத்து விட்டதால் இந்த கதையின் நாடி போய்விட்டதோ என்று ஒரு எண்ணம்.

என்ன இருந்தாலும் பின்னணி இசை, ஒளிபதிவு, கட் ஷாட்ஸ் என்று ஒரு அருமையான குறும்படம் என்றுதான் சொல்ல வேண்டும். வாழ்த்துக்கள் அஷ்வின் !

No comments:

Post a Comment