Thursday, December 6, 2012

ஊர் ஸ்பெஷல் - மதுரை மரிக்கொழுந்து

இந்த பகுதியில் ஒவ்வொரு ஊருக்கும் சிறப்பு என்று அழைக்கப்படும் ஒன்றை தேடிய பயணமும் அதை பற்றிய செய்தியுமே ஆகும், இதை தேடி போகும்போது பல பல ஆச்சர்யங்களை தருகிறது எனலாம். எனது முந்தைய பகுதிகளை படிக்க இங்கே சொடுக்கவும்....

ஆரம்பம் - நம்மூர் ஸ்பெஷல்
திண்டுக்கல் - பூட்டு
மணப்பாறை - முறுக்கு

அந்த வரிசையில் இன்று மதுரை மரிக்கொழுந்து !! இன்று வரை மதுரை பக்கம்
போகும்போது எல்லாம் இந்த  மல்லிகைப்பூ நினைவில் வரும், ஆனால் பாடல்களில், பேச்சுகளில் எல்லாம் மதுரை என்றாலே மரிக்கொழுந்து என்று வரும். இந்த முறை மதுரை சென்றிருந்தபோது ஒரு பூக்காரரிடம் விசாரித்தபோது அவர் ஒரு ஆள் நம்பர் கொடுத்து பேச சொன்னார். இப்படியாக ஆரம்பித்த தேடல் பல ஆச்சர்யங்களை கொடுத்தது என்றால் அது மிகையாகது !



முன்பெல்லாம் மரிக்கொழுந்து மாலை என்றே கிடைக்கும், பக்கத்தில் போனாலே மணம் ஆளை தூக்கும், இன்று பூக்களின் இடையில்தான் இந்த மரிக்கொழுந்து மாலை வருகிறது. மலர்கள் கூட இரண்டு நாட்களுக்குள் தமது நறுமணத்தினை  இழந்து விட கூடும். ஆனால் இந்த நறுமண இலைகளான மரிக்கொழுந்து இலைகள் கருகி போனாலும் மாதக்கணக்கில் நறுமணம் வீசி கொண்டே இருக்கும். அதனால் தான் இன்றும் மரிக்கொழுந்து மாலைகள் பிரபலம். இதிலேயும் "மதுரை மரிக்கொழுந்து" வாசனைக்கு பெயர் போனது.  அந்த மரிக்கொழுந்து ஒரு மரத்தில் வளரும் என்று நினைத்து போனால்......அட ஏமாற்றம்தான் எனக்கு !

அந்த ஆள் எங்களை CBI போல விசாரித்துவிட்டு கடைசியில் அது மதுரையை சுற்றி இருக்கும் ஊரில் இருந்து வருகிறது என்றும், அவர் திண்டுக்கல்லில் இருந்து வாங்குகிறார் என்றும் தெரிந்தது. அவரிடம் இருந்து இன்னொரு நம்பர் வாங்கி என்று கடைசியில் அடுத்த நாள் நாங்கள் மரிக்கொழுந்து தோட்டத்தில் இருந்தோம். இந்த மரிக்கொழுந்துகள்  நட்ட இரண்டரை மாதத்திலிருந்து அறுடைக்கு தயாராகிறது. அதன் பிறகு 30 முதல் 40 நாட்கள் இடைவெளியில் அறுவடையைத் தொடர்ந்து செய்யலாம். செடியை அடிமட்டத்தில் இருந்து வெட்டி அறுவடை செய்ய செய்யலாம் அல்லது மேலே மட்டும் கிள்ளலாம்.



ஒரு மரிக்கொழுந்து செடி வைத்து மூன்று மாதத்தில் நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாராகும், பின்னர் ஒவ்வொரு மாதமும் நீங்கள் அதை பறிக்கலாம். இது போல நான்கு வருடம் வரை நீங்கள் செய்யலாம். நன்கு வடிகால் உள்ள மண் நீர் வசதி உள்ள நீர்நிலைகளில், குளிரான நன்கு வளரக்கூடியது. உயர்த்தப்பட்ட பாத்திகளில் விதைக்கவேண்டும். வளர்ந்த நாற்றுக்களை ஒரு மாததம் கழித்து 15 x 7.5 செ.மீ இடைவெளியில் பாத்திகளில் நடவேண்டும்.



கீழே இருக்கும் படத்தை பார்த்தல் தெரியும் இதை அறுவடை செய்யும் முறை. நான் அங்கே போயிருந்தபோது இதை அறுவடை செய்யும் நபரை பார்த்து இவர் மனிதனா அல்லது மெசினா என்று வியந்து போனேன். எங்களிடம் பேச்சு கொடுத்துக்கொண்டே அவர் விறு விறுவென்று ஒரு சிறு கட்டுக்களாக செய்து கொண்டிருந்தார். ஒரு கட்டில் சுமார் 15 மரிக்கொழுந்து செடியின் தண்டுகள் இருக்கின்றன, இதை கிலோ இவ்வளவு என்று சீசனுக்கு தகுந்தாற்போல விலைக்கு விற்கிறார்கள்.





இதை வாங்கும் உள்ளூர் ஆள், இதை மதுரை இடை தரகரிடம் விற்கிறார்கள். 
அவர், இதை பூக்கடைகளுக்கு விற்கிறார்கள் ! உங்களது கைகளில் அது வரும்போது 50 பைசா கட்டு ஒன்று மூன்றில் இருந்து ஐந்து ரூபாய் ஆகிறது !! இதை செடியில் இருக்கும்போது மோர்ந்து பார்த்தால் அந்த வாசணை தெரியவில்லை, ஆனால் அதை கிள்ளினால் குப்பென்று வாசம் உங்களை தூக்கும். கிள்ளும்போது அந்த செடியில் இருந்து வரும் ஒரு வகை எண்ணையே இதற்க்கு காரணம். மரிக்கொழுந்துகள் அழகு சாதனைகள், நறுமணபொருட்கள், தின்பண்டங்கள், புகையிலை, மற்றும் வாசனை திரவியங்கள் தயாரிக்க பயன்படுகின்றன. குளிர் காலத்தில் பயிர் செய்யப்படும் மரிக்கொழுந்து மற்றநேரங்களில் பயிர் செய்வதை விட
அதிக அளவில் வாசனை எண்ணெய் மகசூலை தருகிறது.


கிராமங்களில் எல்லாம் பெண் பிள்ளைகளுக்கு மரிக்கொழுந்து என்று பெயர் இருக்கும், இதன் மணம்தான் அந்த பெயரை வைக்க தூண்டியதோ என்னவோ ! இந்த பயணத்தில் மதுரையின் 
பெருமையான மரிக்கொளுந்துவை பார்த்து, அதை பயிர் செய்யும் முறையை பார்க்கும்போது, அடுத்த முறை இதன் வாசம் மட்டும் யாபகம் வராது, இந்த இனிய அனுபவமும் நினைவில் வரும் !!

16 comments:

  1. எங்க அம்மாவிற்கு இந்த வாசம் மிகவும் பிடிக்கும்.எங்கே போனலும் கண்ணில் பார்த்தால் வாங்காமல் வீட்டிற்கு வர மாட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அமுதா கிருஷ்ணா ! ஆம், இதன் வாசனையை நானும் அன்று அனுபவித்தேன். யோசித்து பாருங்கள், சிறிதாக இருந்தாலே அப்படி மணக்கும், ஒரு தோட்டத்தில் இருந்தால் ??!!

      Delete
    2. đồng tâm
      game mu
      cho thuê nhà trọ
      cho thuê phòng trọ
      nhac san cuc manh
      số điện thoại tư vấn pháp luật miễn phí
      văn phòng luật
      tổng đài tư vấn pháp luật
      dịch vụ thành lập công ty trọn gói
      http://we-cooking.com/
      chém giósao, chúng ta xử lý chuyện đêm nay, miễn cho đêm dài lắm mộng.

      Đoạn Quý phi nói.

      - Là như vậy, ái phi nói đúng.

      Mộ Dung Trường Bình cũng chỉ có thể đồng ý.

      Nghe thấy Mộ Dung Trường Bình đã đáp ứng, trong mắt của Đoạn Quý phi hiện ra một lãnh ý, trong lòng nàng khẽ lẩm bẩm:

      - Lệnh Hồ Vô Địch, ngươi hủy diệt Đoạn gia, ta cũng phải cho Lệnh Hồ gia ngươi xong đời, chờ ngươi rơi vào trong tay ta ta sẽ trả lại ngươi gấp mười.

      Trong hoàng cung, tại một biệt viện ưu nhã, một mỹ nữ bạch y tuyệt mỹ ở trong hoa viên tản bộ, lúc này cung nữ đã tiến tới nói:

      - Công chúa, hôm nay đế đô xảy ra một chuyện lớn.

      - Tiểu Liên xảy ra chuyện gì vậy, là thiếu gia công tử nào đó để ý tới ngươi sao?

      Bạch Y nữ tử quay đầu lại nói, nụ cười xinh đẹp vô cùng.

      Delete
  2. ஆஹா! அற்புதமான பதிவு, இன்னும் நிறைய எழுதி இருக்கிறீர்கள் போலிருக்கிறதே, நான் இன்றுதான் உங்கள் பக்கம் வருகிறேன், அருமையான தகவல்களை தொடர்ந்து கொடுத்துள்ளது மனதிற்கு சந்தோஷம், உங்களை தொடர்ந்து வருகிறேன். தொடர்ந்து படிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஆகாஷ் ! வருகைக்கு நன்றி, தொடர்ந்து ஆதரவு தருக !

      Delete
  3. அருமையான பதிவு

    ReplyDelete
    Replies
    1. நன்றி கோவிந்தராஜ் ! தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி !

      Delete
  4. IM FROM TUTICORIN .IM CRAZY FOR THIS PLANT.CAN YOU PLEASE GIVE ME ADDRESS SO THAT I WILL BUY SOME TO GROW IN MY SMALL HOUSE.THE SMELL IS EXOTIC.
    I HAVE ALREADY SAMBANGI.
    THANK YOU
    NATHAN

    ReplyDelete
    Replies
    1. Just last week I trashed the number, but you can find it in the sembatty route. Or else in the NH of dindigul to madurai, just stop in the highway and ask anyone about this, they will guide you. The people were friendly and courteous. Happy growing !!
      Thanks for your visit and comments.

      Delete
    2. THANKS A LOT FOR YOUR HELP.
      I WILL GET IT.
      NATHAN

      Delete
  5. மரிக்கொழுந்து வாசம் பதிவு முழுவதும்.
    மதுரை கதம்பத்தில் மரிக்கொழுந்து இல்லாமல் இருக்காது.
    பாடல் பகிவுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கோமதி அரசு ! இந்த பதிவு உங்களை கவர்ந்தது குறித்து மிகவும் மகிழ்ச்சி, மீண்டும் வருக !

      Delete
  6. தங்களின் வலைப்பூவை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
    http://blogintamil.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ! தாங்கள் எனது வலைப்பூவை வலைச்சரத்தில் அறிமுகம் செய்ததது கண்டு மகிழ்ந்தேன், இதனால் சிலர் நண்பர்களாய் ஆனார்கள் ! வருகைக்கு நன்றி !

      Delete
  7. Hi Suresh Kumar, Such a wonderful nativity and soilfragrance you have ! appreciate your exploration of MARIKKOLUNDU, which most of the youngster forgotten already. To add significance of this plant - if you extract oil (or mix with oil) and apply exterior, it gives different fragrance to different person. It is much sought oil in United States and Japan, becz of its uniqueness. It is grown in our state and Karnataka only. I went ur other posting, all are such a wonderful tamil brew. how to write tamil here? you will get lot of blessing fm TamilThaai.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே, உங்களது மனம் திறந்த பாராட்டு எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நான் எடுத்த இந்த முயற்சி உங்களுக்கு பிடித்தது கண்டு மகிழ்கிறேன். முடிவில் சொன்ன வரிகள் எனது கண்களில் நீரை வரவழைத்தது...... தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி !

      Delete