Thursday, February 14, 2013

சாகச பயணம் - பிஷ் ஸ்பா

 நான் திருச்சியில் பிறந்து வளர்ந்தவன், ஆதலால் சிறு வயதில் எனது மாமா என்னை காவிரி ஆற்றுக்கு கூட்டி கொண்டு போகும்போது, சிறு மீன்கள் எல்லாம் எனது காலை கடிக்கும்போதும், புண் இருந்தால் அதை கடிக்கும்போதும் கத்தி கூப்பாடு போடுவேன். ஆனால் இன்று காவிரி வறண்டு போனதால் இந்த பிஷ் ஸ்பா சென்று இன்று அந்த அனுபவத்தை காசு கொடுத்து வாங்க வேண்டும் என்ற நிலைமை !! ஆனாலும் இந்த பிஷ் ஸ்பா ஒரு வித்தியாசமான அனுபவம்தான்....





சிங்கப்பூர் சென்றிருந்தபோது இதை ட்ரை செய்தேன், கால்கள் வலிக்க வலிக்க செண்டோசவில் நடந்து இளைபாரியபோது இது கண்ணில் பட்டது "பிஷ் ரிப்ளெக்ஸ்ஒலோஜி" (Fish Reflexology). கால்களை மசாஜ் செய்தால் அது ரிப்ளெக்ஸ்ஒலோஜி எனப்படும், அதையே இங்கே மீனை வைத்து செய்கிறார்கள். மீன் உங்களது கால்களில் உள்ள இறந்த செல்களை எல்லாம் தின்னுமாம், அது அப்படி தின்னும் போது உங்களது கால்களில் யாரோ கிச்சு கிச்சு மூட்டுவது போல இருக்கும் !






பொதுவாக இந்த வகை மீன்களை டாக்டர் பிஷ் என்பார்கள், அதனது உண்மையான பெயர் கர்ரா ரூபா. இது உங்களது இறந்த தோல் செல் மட்டுமே
உண்ணும் என்பதால்  பயம் வேண்டாம். இந்த வகை மீன்கள் துருக்கி, ஈரான், இராக் மற்றும் சிரியா பகுதிகளில் உள்ள ஆற்று படுகைகளில் மட்டுமே கிடைக்கும். இங்கு சிறிய மற்றும் நடுத்தர வகை மீன் தொட்டிகள் இருக்கும், நீங்கள் அதை உபயோகிக்கும் முன்பு உங்களுக்கு அதை காட்டி ஏதோ ஒரு தொட்டியில் மட்டுமே உங்களுக்கு அனுமதி, ஒரு முறை இறங்கி விட்டால் மறு முறை முடியாது என்று சொல்வார்கள். ஆகவே, இறங்கும் முன் நீங்கள் முடிவெடுக்க வேண்டும்...






இது ஒரு அனுபவம் மட்டுமே.... இதில் பலன் ஏதும் தெரிந்ததா என்றால் எனக்கு பதில் தெரியவில்லை, ஆனால் அந்த மீன்கள் நமது காலை கடிக்கும்போது எல்லாம் அந்த வறண்ட காவிரி ஆறு மனதில் வருவதை நிச்சயம் இங்கு சொல்ல வேண்டும். ஒரு முறை நீங்களும் இதை உபயோகித்து பார்க்கலாம். சிங்கப்பூர், மலேசியா செல்பவர்களுக்கு இங்கு சென்று வர பரிந்துரைக்கிறேன் !



Labels : Fish reflexology, fish spa, kadalpayanangal, fish, doctor fish, kenko, singapore, malaysia, KL

2 comments:

  1. Replies
    1. எதை சார் சொல்றீங்க.... நானா இல்லை மீனா ?? //கவிதை....கவிதை//

      Delete