நித்திலன் என்னும் ஒருவர் இயக்கிய குறும்படம் இது. படத்தின் தலைப்புக்கு ஏற்றார் போலவே இந்த படம் கவிதைதான். என்ன அருமையான கதை, சாலமன் என்று பெயர், ஆனால் வரைவது இந்து கடவுள் படம் என்று சிறு சிறு மனதை வருடும் காட்சிகள். நீங்கள் இந்த குறும்படத்தை பார்க்கும்போது கண்ணில் நீர் துளிர்க்க பார்ப்பது என்பது தவிர்க்க முடியாதது !
இந்த கவிதை போன்ற படம் ஒரு தகப்பனின் பாசத்தை காட்டுவது என்று இருந்தாலும், அவர் ஒரு காட்சியில் தனது மகனை தேடி வருவது போன்ற காட்சியில் அவர்களின் உரையாடல்கள் முடியும்போது கால்களை காட்டி கேமரா நகர்த்தி, அங்கு எல்லோரும் அதை கவனித்து விட்டார்கள் என்று சொல்வது என்பது எல்லாம் அருமை. நித்திலன்...... விரைவில் இயக்குனராக வாழ்த்துக்கள் !
கலங்க வைத்தது...
ReplyDeleteநித்திலன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
நன்றி சார் ! நீங்கள் இந்த படத்தை ரசித்தது கண்டு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் !
DeleteTrying to watch :)
ReplyDeleteநன்றி கிருஷ்ணா ! ட்ரை பண்ணி முடித்தாயிற்றா ? எப்படி இருந்தது ?!
Deleteஅருமையான படம்...கவிதை போல் இருந்தது....
ReplyDeleteதங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றிங்க !
Delete