Wednesday, May 1, 2013

மீண்டும் கடல்பயணங்கள் தொடர்கிறது....!!

ஒரு பயணத்தில் இளைப்பாறுதல் என்பது மிகவும் முக்கியம் என்று இந்த ஓய்வு எனக்கு உணர்த்தியது. எப்போதும் வேலை என்று ஓடிக்கொண்டு இருந்துவிட்டு, சிறிது ஓய்வு எனும்போது இன்னும் புதிதாய் சிந்திக்க முடிந்தது ! நீண்ட நாட்களாக உங்களை காணாமல் இருந்துவிட்டு, இன்று உங்களை சந்திப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. வாருங்கள் பயணத்திற்கு தயாராவோம் !!



இந்த கடல்பயணங்கள் இப்போது ஒரு தனி தளமாக உருவாகியுள்ளது, ஆம் இனி நீங்கள் www.kadalpayanangal.com என்னும் முகவரியிலேயே படிக்கலாம். தளத்தினை சிறிது புதிதாக ஆக்கியுள்ளேன், கண்களுக்கு இதமாக இருக்குமே ! பதிவுகளும் மிகவும் புதிதாக இருக்கும் என்பது நிச்சயம். உதாரணமாக தங்க சுரங்க பயணம், நீர் மூழ்க்கி கப்பல் பயணம், கரூர் கொசுவலை, நாமக்கல் முட்டை, பெங்களுரின் 99 வகை பரோட்டா, ஹை-டெக் உணவகம் என்று தேடி தேடி இந்த பயணத்தில் சேகரித்தேன் ! இது அத்தனையும் இனிமேல் காணலாம்.




எல்லா நேரமும் எனக்கு ஆதரவளித்து, ஊக்கம் கொடுக்கும் எல்லா நண்பர்களுக்கும் மிகவும் நன்றி !! இந்த கடல் பயணத்தில் உங்களின் துணை இல்லையென்றால் இது ஒரு மகிழ்ச்சிகரமான பயணமாக இருக்க முடியாது !

 

1 comment:

  1. வணக்கம் சுரேஸ்குமார். வலைச்சரத்தில் எனது வலைபூவை அறிமுகம் செயதமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete