Wednesday, December 24, 2014

திரும்பி பார்க்கிறேன்...... நன்றி 2014 !!

சமீபத்தில்தான் புத்தாண்டு கொண்டாடியது போல இருக்கிறது, அதற்குள் இந்த வருட கடைசி வந்து விட்டது ! சற்றே திரும்பி பார்க்கும்போது இந்த ஆண்டு பல சந்தோசங்களை கொடுத்து இருக்கிறது, படிப்பினையையும் கொடுத்து இருக்கிறது....... அதுவும் பதிவுலகில் இந்த ஆண்டு நிறைய நண்பர்களை பெற்றுள்ளேன் என்று சந்தோசமாக இருக்கிறது. எனது எழுத்துக்களையும், என்னையும் உரிமையுடன் தலையில் குட்டியும், கொண்டாடியும் என்று இந்த ஆண்டு ஒரு நல்ல ஆண்டாகவே இருந்தது, அதற்க்கு நான் எடுத்த முயற்சியை நினைத்து பார்த்தால், நான்தான் இப்படி ஊர் சுற்றினேனா, நானா இப்படியெல்லாம் பதிவுகள் எழுதி இருக்கிறேன் என்று ஆச்சர்யமாக இருக்கிறது !! வாருங்களேன், என்னோடு சற்றே திரும்பி பார்த்துவிட்டு வரலாம்.......


கடல் பயணங்கள்........ ஒரு புதிய விடியலை நோக்கி !!

***************************************************************************************************************************************
பதிவுலகில் நண்பர்கள் என்பது வரம், அதுவும் நண்பர்கள் மனதில் நினைப்பதை பகிர்ந்து கொள்வதும் அல்லது அவர்களது தளத்தில் என்னுடைய தளத்தை அறிமுகம் செய்வதும் என்று இருக்கும்போது மனதில் ஆனந்தமாக இருந்தது...... இதே ஆனந்தத்தை நான் இது போல் அறிமுகம் செய்து இருக்கிறேனா என்றால் இல்லை என்றே பதில் வருகிறது, ஆகவே இந்த ஆண்டு முதல் என்னுடைய பதிவுகளில் நான் பார்த்து, ரசித்த பதிவுகளை அறிமுகபடுத்த போகிறேன், இது பலருக்கும் சென்று அடைந்து அவர்களும் ஆனந்திககலாமே !! இதோ பதிவர்களின் அன்பு அவர்களது எழுத்துக்களில்......

நண்பர் சௌந்தர் ராமன் அவர்கள், என்னுடைய பதிவுகளில் இருந்து எடுத்த புகைப்படங்களை "உன் சமையலறையில்" படத்தின் பாடலோடு இணைத்து ஒரு வீடியோ செய்து இருந்தார்....... அதை காண இங்கே சொடுக்கவும்....... "இந்த பொறப்புதான் நல்லா ருசிச்சு சாப்பிட கிடைச்சது....."
அதை பற்றி நான் எழுதிய பதிவை படிக்க இங்கே சொடுக்கவும்...... பதிவு 







என்னுடைய பேவரிட் பதிவுலக ஜாம்பவான் "திரு. ஜாக்கி சேகர்" அவர்களை பெங்களுரு வந்த போது சந்திக்க வாய்ப்பு கிடைத்தது, வெகு இயல்பாக உண்மையுடன் பழக கூடிய நண்பராக அதன் பின்னர் மாறினார் (அவரின் நண்பராக நான் என்று சொல்லலாம் !!). அவரோடு அன்று விடைபெறும்போது ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டேன், அதை தனது பதிவுகளில் போட்டு என்னுடைய வலைதளத்தையும் குறிப்பிட்டது இந்த வருடத்தின் மிக பெரிய சந்தோசம் எனலாம்........ அதை படிக்க இங்கே சொடுக்கவும் "பெங்களுரு டேஸ்"


முதன் முதலில் நான் படித்த பதிவே திரு.கேபிள் சங்கர் அவர்களதுதான்,  அதன் பின்னரே இந்த பதிவு உலகம் அறிமுகம் ஆனது. அவரது சாப்பாட்டு கடை பதிவுக்கும், சினிமா விமர்சனத்துக்கும் நான் ரசிகன், அவரை சந்திக்க மாட்டோமா என்று ஆவலோடு காத்துக்கொண்டு இருந்த நேரம் இந்த ஆண்டு நிறைவேறியது. அதுவும் அவருடன், அவர் ஆர்டர் செய்த உணவை அவரோடு உண்டது சந்தோசமான அனுபவம் !


எப்படியாவது இந்த பதிவர் சந்திப்பில் இவரை சந்திக்க வேண்டும் என்று ஆவலோடு இருந்தது திரு.கணேஷ் பாலா அவர்களுக்காக. கோவை ஆவியும், ஸ்கூல் பையன், திடம் கொண்டு போராடு சீனுவும் இவரை பற்றி வாரத்திற்கு ஒருமுறையாவது முகநூல் பக்கத்தில் ஏதாவது செய்தி போட்டுக்கொண்டு இருப்பார்கள், இதனால் ஆவல் இன்னும் அதிகம் ஆனது. பதிவர் சந்திப்பில் இவரை சந்தித்தபோது எந்த பந்தாவும் இல்லாமல் உரிமையோடு உரையாடி, இன்று எனக்கும் இவர் அன்பு "வாத்தியார்". நான் 500'வது பதிவு போடும்போது அதை அழகு செய்ய ஒரு பேனர் வேண்டும், எப்படி செய்வது என்று கேட்க போன் செய்ய, மூன்று விதமான கண்களை பறிக்கும் பேனரை அனுப்பி அன்பினால் என்னை திக்கு முக்காட செய்தார்...... அவரது முகநூல் பக்கத்தில் என்னை பற்றி பகிர்ந்தபோது !


"மெட்ராஸ் பவன்" சிவகுமார்..... இவரை மதுரை பதிவர் சந்திப்பில் சந்தித்து இருந்தேன், இன்று வரை அதிகம் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை, ஆனாலும் இவரது நகைச்சுவையான பேச்சுக்கும், எழுத்துக்கும் நான் ரசிகன். இவர் தனது தளத்தில் என்னுடைய கடல்பயணங்கள் பற்றி எழுதி இருந்ததை பார்த்து மிகவும் மகிழ்ந்தேன். நல்ல நண்பரும், ரசிகருமான இவரை நேரில் சந்திக்க எப்போதும் ஆவலாய் இருக்கிறேன்.
அவரது பதிவை பார்க்க இங்கே சொடுக்கவும்...... மெட்ராஸ் பவன் 


பதிவுலகில் இவரை தெரியாதவர்கள் என்பது மிக மிக குறைவே, நான் இதுவரை எழுதி வருவதற்கு காரணமும் இவரே. என்னுடைய பேட்டி மதுரை தினமலர் இதழில் வந்து இருக்கிறது என்று தெரிந்தவுடனே எனக்கு அதிகாலையில் போன் செய்து வாழ்த்தி, எல்லா தளத்திலும் இதை பதிவு செய்த அற்புத மனிதர். நான் திண்டுக்கல் செல்லும்போது எல்லாம் தவறாமல் சென்று பார்த்து வருவேன்.... அவர் முகநூளில் அந்த பத்திரிக்கை செய்தியை பகிர்ந்த போது எழுதியது !


இந்த வருடம் பத்திரிக்கையில் கடல்பயணங்கள் தளம் அதிகம் பகிரப்பட்டது, இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபர் திரு.சம்பத் அவர்கள் என்னை தொடர்ப்புக்கொண்டு ஒரு பேட்டி எடுத்தார், அது வந்த பக்கத்தை முகநூளில் பகிர்ந்தபோது என்னுடைய அன்பு நண்பர் திரு.சீனு (திடம் கொண்டு போராடு) மனம் திறந்து எழுதிய வரிகள் என்னை கூச்சப்படுதியதும், சந்தோசபடுதியதும் எனலாம். சீனுவின் பயண கட்டுரைகளை படித்தவர்கள், அவருடனேயே பயணம் செய்வது போல ஒரு உணர்வு தரும், அந்த அளவிற்கு எழுத்து ஆற்றல் உண்டு. பதிவுலகில் ஒரு நல்ல இடம் இவருக்கு காத்திருக்கிறது என்பேன்.


பெங்களுரு நண்பர் திரு.ஜெகதீஷ் அவர்கள் குறும்புடன் செய்து இருந்த ஒரு புகைப்படம், மிகவும் ரசித்தேன் ! இவர் பெங்களுருவில் இருந்தாலும் உணவு பிரியர், என்னை விட இவர்க்கு தகவல் நிறைய தெரிந்து இருக்கிறது, இவர் பதிவு எழுத ஆரம்பித்தால் நானே விரும்பி படிப்பேன், அந்த அளவுக்கு நல்ல ரசிகர், நண்பரும் கூட...... இந்த புகைப்படத்தை போட்டவர், கூட ஒரு ஹீரோயின் போட்டு இருக்கலாம் :-)




***************************************************************************************************************************************
நண்பர்கள் அவர்களுடைய தளத்தில் பாராட்டியது ஒரு சந்தோசம் என்றால், இன்னொரு சந்தோசம் எனது பெயர் முதல் முறையாக, அதுவும் கடல் பயணங்கள் என்ற தளம் பற்றிய செய்தி முதல் முறையாக மூன்று பேப்பரில் வந்து இருந்தது அதுவும் எனது ஸ்பெஷல் பேட்டியுடன். இதை படித்த நிறைய பேர், என்னை முகநூலில் இன்று தொடர்கின்றனர், பலர் போன் மூலம் பாராட்டினர். இது திரு. தமிழ்வாசி பிரகாஷ், திரு.திண்டுக்கல் தனபாலன், திரு.சரவணன் செல்வராஜன் அவர்களது மூலம் கிடைத்த வாய்ப்பு..... நன்றி நண்பர்களே !

28-அக்டோபர்-2014, இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தாளில் வந்தது........ நன்றி திரு.சம்பத்  !

09-நவம்பர்-2014 அன்று தினமலர் நாளிதழில் வந்த செய்தி.... நன்றி திரு.எட்வின் !
21-நவம்பர்-2014 அன்று "தி ஹிந்து" தமிழ் நாளிதழில் வெளி வந்த செய்தி.......நன்றி திரு.மகேஷ் !
இந்த செய்திகள் வருவதற்கு முன்பே "ஹாலிடே நியூஸ்" என்னும் மாத இதழில் எழுத முடியுமா என்று கேட்டு என்னை அணுகினார் இந்த பத்திரிக்கையின் இணை ஆசிரியர் திரு.செந்தில்குமார். அவர் கொடுத்த ஊக்கத்தில் அக்டோபர் மாதத்தில் இருந்து பயண அனுபவங்களை எழுதி வருகிறேன்..... படித்து பார்த்து விட்டு சொல்லுங்களேன் !



**************************************************************************************************************************************

 பதிவர் திருவிழா :

ஆபீசில் ஒரு மீட்டிங் நடத்துவதற்கே நிறைய கஷ்டப்பட வேண்டியிருக்கிறது, இதில் பதிவர் திருவிழா என்பது அதுவும் வேலை பளுவுக்கு இடையில் என்பது நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒன்று, அதை சாத்தியமாக்கி காட்டினர் மதுரை மைந்தர்கள் !! அந்த பதிவர் திருவிழாவில் நிறைய பதிவர்களை பார்த்தது, பேசியது என்பது சந்தோசமான அனுபவம்.... அதை பற்றி எழுத வேண்டும் என்று நினைத்து நினைத்தே நாள் சென்று விட்டது, ஆனாலும் இங்கே பதிவர்களுடன் எடுத்த போட்டோ இந்த வருடத்தின் ஹிட் சந்தோசம் !!


பதிவர்கள் திரு.பால கணேஷ், திரு.அரசன் அவர்களுடன்.....

பதிவர்கள் திரு.சங்கரலிங்கம், திரு.ஸ்கூல் பையன் உடன்.....

பதிவர்கள் திரு.கோவை ஆவி, திரு.ரூபக் ராம், திரு.சிவகாசிக்காரன் உடன்......

பதிவர் திருமதி. துளசி கோபால் உடன்.....

பதிவர்கள் திரு.சங்கரலிங்கம், திரு.ரமணி அவர்களுடன்.....

பதிவர்கள் திரு.தமிழ்வாசி பிரகாஷ், திரு. கோவை ஆவி, திரு.ஸ்கூல் பையன், திரு.பகவான்ஜி, திரு.கில்லர்ஜி உடன்....

பதிவர்கள் உடன் ஒரு காபி தருணம்..... திரு.மகேந்திரன் அவர்களின் தொகுப்பு அன்று அருமை !!
***************************************************************************************************************************************

பதிவர் சந்திப்பு மட்டும் இல்லாமல், தனி சந்தர்ப்பத்திலும் நண்பர்களை சந்திப்பது அல்லது சக பதிவர்களை சந்திப்பது என்று நடக்கும், அந்த தருணங்கள் மிகவும் அழகானவை. சிரிப்பும், கூத்தும் என்று நடக்கும் அந்த சந்திப்புகள் மிகவும் சந்தோசம் தரும். சில நேரத்தில் பேச்சு சுவாரசியத்தில் போட்டோ எடுக்க மறந்தது உண்டு, அவ்வாறு அமுதா கிருஷ்ணன், சிங்கப்பூர் வினோத் அமிர்தலிங்கம், சிங்கப்பூர் சந்தோஷ், கும்பகோணம் ஆனந்த், பதிவர் சந்திப்பில் ஏராளமான பதிவர்கள், கிரேஸ், குடந்தை சரவணன் என்று நிறைய பேர் உண்டு. போட்டோ எடுத்த சில தருணங்கள்.......

சென்னையில்..... ஸ்கூல் பையன், ஜாக்கி சேகர், நாஞ்சில் மனோ, கோவை ஆவி, "வாத்தியார்" பால கணேஷ் !

சென்னையில்....... "மெட்ராஸ் பவன்" சிவகுமார், கோவை ஆவி !

"திடம் கொண்டு போராடு" சீனு மற்றும் கோவை ஆவியுடன் !
***************************************************************************************************************************************
ஒவ்வொரு ஆண்டும், இந்த பயணத்தில் புது இடங்களையும், நண்பர்களையும் சந்திக்கிறேன். இந்த 2015ம் ஆண்டும் இந்த பயணங்கள் சுவையோடும், அறிவு தேடலோடும், கண்களுக்கும் மனதுக்கும் குளிர்சியோடும், எழுதும் எழுத்துக்கள் இன்னும் செறிவோடும், சந்திக்கும் நண்பர்கள் இன்னும் நெருக்கதோடும் இருக்க இறைவனை பிராத்திக்கிறேன்....... ஒவ்வொரு ஆண்டும் ஒரு தேடலோடு ஆரம்பிக்கிறது, அந்த தேடல் என்னை இயக்குகிறது, அதையே உங்களுடன் பகிர்கிறேன் ! இந்த ஆண்டும் கடல் பயணங்கள் இனிதோடு ஆரம்பிக்க உங்களது வாழ்த்துக்களோடு துடுப்பு போட ஆரம்பிக்கிறேன்........ பயணங்கள் முடிவதில்லை !!

2015ம் ஆண்டு இனிய உதயத்துடன் ஆரம்பிக்கட்டும்.....!!


Labels : Suresh, Kadalpayanangal, Others, Look back 2014, Sweet memories, 2014 achievements, Year end, Eve of the year, end of 2014, What I did in 2014, Blogger.com, Blogger, Memories, Cherishing moments 

5 comments:

  1. வணக்கம்
    அண்ணா

    இன்னும் நிறைய படைப்புக்கள் வெளிவர எனது வாழ்த்துக்கள் தொடருங்கள் பணியை.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. அட்டகாசமான படங்கள்... இந்த சந்தோசம் என்றும் தொடரும்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. வாழ்த்துகள். வரும் வருடம் மேலும் சிறக்க என் அன்பு.

    ReplyDelete
  4. இப்படி ஒரு ஆசையா...? மவனே, மாட்னடா என்கிட்ட... உனக்கு அசத்தலான ஜோடிகளோட போட்டோ கலவை செஞ்சு ஒரு வழி பண்ணிடறேன் இரு.... இனிவரும் நாட்கள்ல முகநூல்ல ஹீரோ சுரேஷ் அசத்தப் போறார் மக்களே... ஹா... ஹா... ஹா...

    அந்த ஹாலிடே நியூஸ் இங்க கிடைக்கறதில்ல சுரேஷ். அதுல நீ எழுதற எழுத்துக்களை சேமிச்சு வைச்சுக்கோ. அழகா ஒரு மின் புத்தகமாக்கித் தர்றேன்...

    எல்லா நண்பர்களையும் நினைவுகூர்ந்து வருஷக் கடைசில பகிர்ந்த உன் எண்ணமும் செயலும் சிறப்பானது. என் அழுத்தமான கைகுலுக்கல் உனக்கு.

    ReplyDelete