Monday, January 16, 2017

ஊர் ஸ்பெஷல் - ராமநாதபுரம் பால் சர்பத் !!

ராமநாதபுரம்..... இந்த ஊரின் பெயரை கேட்கும்போதே ஒரு விதமான ஆர்வம் தோன்றும் ! ஓ ராமநாதபுரமா என்று கேட்டுவிட்டு, அப்புறம் சொல்லுங்க ஊரு எப்படி இருக்கு என்று சடுதியில் நண்பர்கள் ஆனவர்களை பார்த்திருக்கிறேன். இந்த ஊரை போலவே, இங்கு சுவையான உணவு எது என்று கேட்டால் எல்லோரும் என்னை ஏற இறங்க பார்த்துவிட்டு சொல்வது..... இன்னுமா எங்க ஊரு நன்னாரி பால் சர்பத் சாப்பிடலை என்பது. அப்படி என்னதான் இருக்கிறது என்று தேடி செல்கையில் நிறைய தெரிந்தும், சுவைத்தும் மகிழ முடிந்தது !



இராமநாதபுரம் (Ramanathapuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இது மாவட்டத்தின் தலைநகராகும். 1063இல் முதலாம் ராஜேந்திர சோழன் இதை தன் ஆளுமையில் கிழ் கொண்டுவந்தனால், இது சிறிது காலம் சோழ பேரரசின் கீழ் இருந்தது.
1520இல் விஜயநகர பேரரசை சேர்ந்த நாயக்கர்கள் பாண்டிய நாட்டை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர், இதனால் பாண்டிய நாட்டின் கீழ் ஒரு பாளையமாக இருந்த ராமநாதபுரம் சமஸ்தானம் நாயக்கரின் கீழ் பதினேழாம் நூற்றாண்டு வரை இருந்தது. மதுரை நாயக்கர்கள் காலத்தில் மறவர்கள், மதுரை ஆட்சியின் ராமநாதபுரத்தின் படைத்தலைவர்களாக இருந்தனர். நாயக்க மன்னரின் பலவீனத்தை பயன்படுத்தி இரகுநாதத்தேவர் என்னும் கிழவன் சேதுபதி மன்னரானார். இதில் சிவகங்கை மன்னரும் முக்கியமானவர். 1730இல் கர்நாடகத்தைச் சேர்ந்த சந்தா சாஹிப் ராமநாதபுரத்தை கைபற்றினார். இந்த பகுதி 1741இல் மராத்தியர்களின் கீழும் பின்னர் 1744இல் நிஜாம்மின் கீழும் இருந்தது. 1752இல் நவாப்பின் மேல் ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக, கடைசி நாயக்க மன்னரின் தலைமையில் உள்ளூர் முக்கியஸ்த்தர்கள் கலகத்தில் இடுபட்டனர். அந்த நேரத்தில், கர்நாடக அரியாசனத்தில் சந்தா சாஹிப் மற்றும் முஹம்மது அலி ஆகிய இருவர் இருந்தனர், மற்றும் இந்த மாவட்டம் கர்நாடகத்தின் பகுதியாக இருந்தது. பிரித்தானியர்கள் சந்தா சாஹிப்பையும், பிரஞ்சுக்காரர்கள் முஹம்மது அலியையும் ஆதரித்தனர். இது தென்பகுதிகளில் தொடர் முரண்பாடுகளுக்கு வழிவகுத்தது. ராணி வேலு நாச்சியாரின் மறைவுக்கு பின்னர் மருது சகோதரர்கள் கிழக்கு இந்திய கம்பெனிக்கு முறையாக வரி செலுத்தி சிவகங்கையின் அதிகாரத்தில் இருந்தனர். கௌரிவல்லப பெரியஉடையத்தேவர், மருது சகோதரர்களிடமிருந்து சிவகங்கையை மீட்க ஆங்கிலேயர்களின் உதவியை நாடினார். களோனல் அக்னல் மருது சகோதரர்களை பிடித்து தூக்கில் போட்டுவிட்டு கௌரிவல்லப பெரியஉடையத்தேவரை சிவகங்கையின் ஜமின் ஆக்கினார். 1892இல் ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்டு பிரித்தானிய ஆட்சியர் நிர்வாகத்திற்காக நியமிக்கப்பட்டார். 1910இல் மதுரை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் பகுதிகளைக் கொண்டு ராமநாதபுரம் மாவட்டம் உருவாக்கப்பட்டது. ஜே.எப்.ப்ரைண்ட் முதல் மாவட்ட ஆட்சியர் ஆனார். பிரித்தானியர்களின் காலத்தில் இந்த மாவட்டம் ராம்நாடு என வழங்கப்பட்டது; இந்த பெயர் சுதந்திரத்திற்கு பின்பும் நீடித்தது. பின்னர் தமிழ் பெயராகிய ராமநாதபுரம் இந்த மாவட்டத்திற்கு சூட்டப்பட்டது. இந்த பகுதியின் மற்றொரு பெயர் முகவை. முகவை என்றால் வைகையின் முகம், அதாவது வைகை நதி கடலில் சங்கமிக்கும் இடம் என்னும் பொருள்.



இந்த பகுதிகளில் சுற்றி வரும்போதே தெரிகிறது இது வானம் பார்த்த பூமி என்பது, வெயிலில் சுற்ற சுற்ற நா வறண்டு என்னதான் தண்ணீர் குடித்தாலும் இன்னும் வேண்டும் என்றே தோன்றுகிறது. ஊரில் எங்கும் ஏதாவது சர்பத் கடை இருக்கிறது, இன்னமும் இந்த மக்கள் கோக், பெப்சி போன்ற வகைகளை சுவைக்காமல் இருப்பது கண்டு ஆச்சர்யப்பட்டேன்.... ஒரு வேளை இவர்கள் எல்லாம் இன்னமும் இந்த இன்டர்நெட் போன்றவற்றை  தெரிந்துக்கொள்ளாமல் இருக்கின்றார்களோ என்று யோசித்து கொண்டு இருக்கும்போது, அதெல்லாம் இல்லை இவர்கள் நாக்கு எல்லாம் இன்னமும் நன்னாரி பால் சர்பத்துக்கு அடிமை என்று சொன்னபோது, அது என்ன அது அப்படிப்பட்ட சுவையான ஒன்று என்று தோன்றியது !! 



ஒரு பொருளின் பெயரிலேயே அதன் சிறப்பைப் புதைத்து வைத்திருப்பது சித்த மருத்துவத்தின் மகத்துவங்களில் ஒன்று. ‘நல்ல + நாரி’ என்று பிரித்தால் பொருள் தரும் நன்னாரி, நம்மை அவதிப்படுத்தி வரும் பல்வேறு நோய்களையும் போக்கவல்லது. எல்லா இடங்களிலும் எளிதாகக் கிடைக்கும் நன்னாரி, இந்தியா முழுமையிலும் தானே வளர்கிற கொடி இனத்தைச் சார்ந்த ஒரு தாவரம். ஆடி, ஆவணி மாதங்களில் கொத்துக் கொத்தாக வெண்மை மலர்கள் பூத்திருக்கும். இந்தக் கொடியின் பச்சை வேர் சற்று இனிப்பும் நறுமணமும் கொண்டது. உலர்ந்த பின்னரும் இதன் நறுமணம் அகலாது.வெண்மை நன்னாரி, கருமை நன்னாரி என இரு விதமாகக் கிடைத்தாலும், இரண்டுமே ஒரேவிதமான மருத்துவ குணங்களைக் கொண்டவைதான். ‘நறுநெட்டி’,  ‘பாதாளமூலி’,  ‘பாற்கொடி’, ‘நீறுண்டி’ என்று பல பெயர்களில் மருத்துவர்களால் அழைக்கப்படும் நன்னாரியில் பல வகைகளும் உள்ளன. நாட்டு நன்னாரி, சீமை நன்னாரி, பெரு நன்னாரி, சிறு நன்னாரி எனவும் பல வகைகள் உள்ளன! நன்னாரியை நீரில் இழைத்து மேல் பூச்சாகப் பயன்படுத்துவதால் உடல்வலி போகும். உடலைக் குளிர்ச்சிப்படுத்தவும் உதவும். நன்னாரி வேர் மலச்சிக்கலை போக்கக்கூடிய மருத்துவ குணங்களும் பொருந்தியது. மேலும், இரைப்பையைச் சேதப் படுத்தும் அமிலத் தன்மையையும் குறைப்பதோடு ரத்தத்தைச் சுத்தப்படுத்தவும் நன்னாரி உதவுகிறது.


பால் சூடாக கற்கண்டு எல்லாம் போட்டு குடிக்கும்போது ஒரு சுவை இருக்கும், அதுவே அந்த பாலை சுண்ட காய்ச்சி விட்டு சில்லிப்பு செய்து வைத்தால் அந்த குளுமையே ஒரு விதமான ருசியை கொடுக்கும் இல்லையா, இப்போது அதனில் தேனை கலந்து சுவைத்து பார்த்தால் தேவர்களின் அமுதை மிஞ்சிவிடுமோ ?! நன்னாரி மற்றும் இந்த குளுமையான பாலை கொஞ்சம் கடற்பாசியோடு நினைத்து பாருங்கள்.... அதன் சுவை விளங்கும் ! ராம்நாடு மக்கள் இதன் சுவையில் மயங்கி கிடப்பது ஒன்றும் தப்பில்லை என்பது இப்போது உங்களுக்கு விளங்கும். இங்கு யாரை கேட்டாலும், சுவையான நன்னாரி பால் சர்பத் சாப்பிட என்று உங்களுக்கு கை காண்பிப்பது என்பது இந்த காதரியா சர்பத் கடையைத்தான்.

ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில், ஒரு மரத்தின் நிழலின் பின்னே ஒரு சிறிய கடையாக இருக்கிறது இந்த காதரியா பால் சர்பத் கடை. வெயிலுக்கு வேர்த்து விறுவிறுத்து செல்லும் நமக்கு ஒரு குளுமையை மேனிக்கு மரம் சிறு காற்றுடன் கொடுக்க, அந்த கடையின் பலகையில் என்ன என்ன சர்பத் எல்லாம் இருக்கிறது என்று பார்க்கும்போது மனமும் இத்தனை வகையான சுவையா என்று சற்று குளிர்ந்து விடுகிறது. நமக்கு முன்னர் எல்லோரும் கைகளில் பால் சர்பத் வாங்கி ருசித்து சாப்பிடும் போது, என்னதான் ஆரஞ்சு, மேங்கோ, சோடா சர்பத், பிஸ்தா என்று பல பல வகையான சர்பத் இருந்தாலும் எனக்கு பால் சர்பத் ஒன்னு என்று கண்களும், வாயும் ஒரு சேர சொல்கின்றன !!




கடையில் இருந்தவர் சர்பத் போடும் வேகத்தையும், சுழிவையும் பார்த்தாலே இவர் பல பல வருடமாக இதை செய்து கொண்டு இருக்கின்றார் என்பது விளங்கும். நன்னாரி சர்பத் கொஞ்சம் விட்டு அதன் மேலே ஐஸ் கொஞ்சம் உடைத்து போட்டு, நன்கு திக்க்கான பால் ஊற்றி, அதன் மீது கடல் பாசி கொஞ்சம் போட்டு ஒரு கலக்கு கலக்கி கொண்டு இருக்கும்போதே, இங்கே நமது நமது நீங்க கலக்குங்க தல என்று சொல்லி விடுகிறது, அதை அந்த வெயில் நேரத்தில் வாயிற்கு கொண்டு செல்லும்போதே வாசனையும், குளிர்ச்சியும் இன்னும் ஒன்னு என்று சொல்லிவிட்டு சாப்பிட தொடங்குகிறோம்..... அந்த முதல் மடக்கு தொண்டையில் இறங்கும்போதே நமக்கு ஒரு ஏகாந்த சுவை தெரிய ஆரம்பிக்கிறது..... ஏய் கோக் பெப்சி காரனே, இதை மார்க்கெட் பண்ணி பாரு இந்த உலகமே உனக்கு அடிமையாகும் !!


அடுத்த முறை ராமதாபுரம் பக்கம் செல்லும்போது இந்த சுவையை சுவைக்க மறக்காதீங்க, இந்த ஊர்க்காரங்க நாக்கு எப்படி இவ்வளவு அடிமை ஆகி இருக்கும் என்பதை சுவைத்து உணருங்கள்.... சில சமயங்களில் அடிமையாவதும் ஒரு சுகம்தானே !!



Labels : Oor special, district special, oorum rusiyum, ramathapuram, ramnad, milk sarbath, paal sarbath, Kathariya sarbath

15 comments:

  1. ஆகா
    தங்களைச் சந்தித்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டன நண்பரே
    தொடருங்கள்

    ReplyDelete
  2. சுவையான பகிர்வுடன் இவ்வாண்டு துவக்கம்... தொடர்க...

    ReplyDelete
  3. ஆஹா.... மீண்டும் உற்சாக ஆரம்பமா?

    ReplyDelete
  4. MK CINEMA இது நமது சேனல் இதை SUBSCRIBE மற்றும் ஷேர் செய்யுங்கள் நண்பர்களே.

    மேலும் பலதரப்பட்ட சுய தொழில் இலவச பயிற்சி வகுப்புகளை இங்கு அறிமுகம் செய்ய இருக்கிறோம்.

    நீங்கள் நமது சேனலை இது போன்று லைக் ஷேர் செய்தால் மேலும் மேலும் நாங்கள் விடீயோக்கள் போடுவதற்கு எங்களை ஊக்கப்படுத்தி. மேலும் எங்களை சிறப்பாக விடீயோக்கள் பதிவிடுவதற்கு உதவும் நண்பர்களே ..

    நிறை மற்றும் குறைகள் இருப்பின் கமெண்ட் இல் தெரியப்படுத்துங்கள்.உங்களது கமெண்ட்கள் வரவேற்கப்படுகிறது .

    வாழ்க தமிழ் வளர்க தமிழ் .

    வாழ்க வளர்க மகிழ்ச்சியுடன்

    நமது நமது சேனல் பக்கத்திற்கு செல்ல கீழே உள்ள லிங்க் கிளிக் செய்யுங்கள்.
    https://www.facebook.com/Mkcinema-298392973889075/app/212104595551052/

    ReplyDelete
  5. நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் பக்கத்தில் ஒரு பகிர்வு. மகிழ்ச்சி...

    ReplyDelete
  6. ஆண்ட்ராய்டு மொபைல் மூலமாக உங்களது லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரை கண்ட்ரோல் செய்வது எப்படி ?

    https://www.youtube.com/watch?v=IP3c11mDBCc

    ReplyDelete
  7. https://www.youtube.com/watch?v=XUaivbbjv6g

    ReplyDelete
  8. How To use Hangout Video calls free

    Google Hangout பயன்படுத்துவது எப்படி ?

    https://www.youtube.com/watch?v=aor8wBEWypc

    ReplyDelete
  9. How To use Hangout Video calls free

    Google Hangout பயன்படுத்துவது எப்படி ?

    https://www.youtube.com/watch?v=aor8wBEWypc

    ReplyDelete
  10. வீட்டில் இருந்து கொண்டு ஆபிஸில் உள்ள கம்ப்யூட்டரை பயன்படுத்துவது எப்படி ?

    https://www.youtube.com/watch?v=kRQRe6NTD84

    ReplyDelete
  11. Facebook-ல் தேவையில்லாத விளம்பரங்களை வராமல் தடுப்பது எப்படி?

    https://www.youtube.com/watch?v=w_3MUp-bkjM

    ReplyDelete
  12. நமது Facebook Account மற்றவர்கள் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள்வது எப்படி ?

    https://www.youtube.com/watch?v=FDCGRfzuQgw

    ReplyDelete
  13. வாட்சப்பில் தமிழில் மெசேஜ் அனுப்புவது எப்படி ?
    https://www.youtube.com/watch?v=pSNKJn9G-FA

    ReplyDelete
  14. ஒரு App Download செய்து 10 மேற்பட்ட App-களை பயன்படுத்துவது எப்படி ?


    https://www.youtube.com/watch?v=oaQUWzIbZpo

    ReplyDelete
  15. Feeling tempted to drink this immediately..

    ReplyDelete